ஊரும் பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம் MUSEUM& KHRDT#
21. பெல்லப்பள்ளியின் கிழக்கு பகுதியில் இருக்கும் வரதையநாயக்கர் - கால கல்வெட்டு 350 ஆண்டுகளுக்கு முன்பே பெல்லம்பள்ளி ( விழாம்பள்ளி ) இருந்ததற்கான ஆதாரத்தை தருகின்றது https://youtu.be/rkleFpsLWXQ 20.பெயரிலேயே அழகினை கொண்ட ஊர் நமது சிங்காரப்பேட்டை ஆனால் அந்த பெயர் எப்படி வந்தது என ஆராயும் போது கிடைத்த தகவல் ஒரு தலைவனின் பெயராலே இந்த ஊர் அழைக்கப்பட்டு இப்படி அழகான பெயரான சிங்காப்பேட்டை என மாறி இருக்கிறது. https://youtu.be/eKmcUfsk0nk 19.இயல்பான செயல்களும் சினைப்பெயர்கள் போல - காரணம் கருதி வழங்கி வருகின்ற பெயர்களுல் ஒன்று 620 வருடங்கள் பழமையான செறியன்பள்ளி என்ற குரியனப்பள்ளி கல்வெட்டு ஆதாரத்துடன். தேவர்குந்தாணி கோவில் திருவிழாக்களில் வரிசை எடுக்கும் உரிமையும் திருக்கல்யாணத்திற்கு கங்கணம் கட்டிக் கொள்ளும் உரிமையும் இந்த ஊரார் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது https://youtu.be/vTmrNsbzZ50 18.ஊரும் பேரும் – தோற்றத்தினை வைத்து அந்த ஊரின் பெயர் அமைந்திருந்தாலும் 700 ஆண்டுகளுக்கு முந்தய புகழ்பெற்ற வரதராசர் ஆலையமும்,,. பழைமையான சிவன...